Apr 1, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும்
தற்போதைய செய்திகள்

நான்கு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும்

Share:

டிச.16-

இன்று முதல் வரும் வியாழக்கிழமை வரை நான்கு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான METMALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது.

METMALAYSIA வெளியிட்டுள்ள அறிக்கையில், பகாங், பேரா, கிளந்தான், திரங்கானூ ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

பகாங்கில் Jerantut, Maran, Kuantan, Pekan , Rompin உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், பேராவின் உலு பேரா மாவட்டத்திலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், வானிலை ஆய்வுத்துறை கிழக்கு கடற்கரைப் பகுதிகள் உட்பட ஏழு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

நவம்பர் முதல் மார்ச் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கிழக்கு கடற்கரை மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும் அபாயம் அதிகம் எனவும் METMALAYSIA குறிப்பிட்டுள்ளது.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்