இசிஆர்எல் இரயில் திட்டத்தின் முதல் தண்டவாளத்தைப் பொறுத்தும் நிகழ்ச்சியில் மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தஃபா பில்லா ஷா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி குவாந்தான், கெபெங் இல் உள்ள தாப்பாக் ஸ்தேசன் இசிஆர்எல் இல் நடைபெற்றது. 665 கிலோ மீட்டர் தூரம் நிர்மாணிக்கப்பட உள்ள இந்த திட்டத்தில் 20 இரயில் நிலையங்களும் அடங்கும்.
கடந்த 2017 ஆகஸ்டு 9 ஆம் நாள் தொடங்கப்பட்ட இத்திட்டம் எதிர்வரும் 2027 சனவரி மாதம் நிறை வடையும் எனக் கூறப்பட்டது.







