புத்ராஜெயா, ஜூலை 09-
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பில் தமக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்தியிருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் செய்து கொண்ட மேல்முறையீட்டில் வரும் ஆகஸ்ட் 20 ஆ ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவிருக்கிறது.
நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பில் இருந்த போது Jana Wibawa நிதித் திட்டத்தில் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக 23 கோடியே 25 லட்சம் வெள்ளி தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகளை முகைதீன் யாசின் எதிர்நோக்கியுள்ளார்.
தமக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து, அக்குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுதலை செய்து இருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன், தமது மேல்முறையீட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.








