Mar 16, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து வாகனங்கள் மோதி கொண்டதில் இருவர் பலி
தற்போதைய செய்திகள்

ஐந்து வாகனங்கள் மோதி கொண்டதில் இருவர் பலி

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.22
டெங்கில், ஜாலான் பந்திங்-கில் ஐந்து வாகனங்கள் மோதி கொண்டதில் பத்து வயது சிறுவனும் 40 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இன்று காலையில் நடந்த இந்த கோர விபத்தில் சிறுவனும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் 20 வயதுடைய பெண்ணின் காலில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புபடையினர் துணைத்தலைவர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

நான்கு வாகனங்கள் மீது லோரி மோதியதில் கார் ஒன்று நசுங்கியதாக அஹ்மாட் முக்லிஸ்கூறினார்.

அக்கார்களில் வந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News