கோலாலம்பூர், 05-
அட்டர்னி ஜெனரல் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு, சம்பந்தப்பட்ட மசோதாவை விரைவில் முடிவு செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
முன்பு ஒப்புக் கொள்ளப்பட்ட பரிந்துரைகள் மீதான மேலதிக ஆய்வுக்குப் பிறகு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வரும் மே 18-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி கூட்டத்திற்கு முன்பாக, பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கிய அறிக்கையுடன் மசோதாவையும் முடிவு செய்வது அக்குழுவின் நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று தாம் தலைமை தாங்கிய ஐந்தாவது குழுக் கூட்டத்தில், மசோதாவை வரைவு செய்வதில் கவனம் செலுத்தியதாகவும் அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.








