கோவிட் - 19 காலகட்டத்தில் வேலை இழந்தவர்களுக்கு மறு பயிற்சி அளித்து பணிக்கு அமர்த்தும் ஊக்குவிப்புத் திட்டத்தில் கீழ் 6 கோடியே 30 லட்சம் வெள்ளி மோசடி தொடர்பில் இதுரையில் 67 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.
அதேவேளையில் அவர்களின் 32 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளையும் எஸ்.பி.ஆர்.எம். முடக்கியுள்ளது. வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மறுபயிற்சி அளித்து, வேலைக்கு சேர்த்துக்கொண்டதைப் போல போலியான ஆவணங்கள் மற்றும் கணக்குகளை காட்டி, அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றது தொடர்பில் நிறுவன இயக்குநர்கள், நிர்வாகிகள் உட்பட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். தெரிவித்துள்ளது.
தவிர அரசாங்கப் பணத்தை பயன்படுத்தி அவர்கள் வாங்கிய சொகுசு கார்கள் உட்பட அவர்களின் உடமைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கும் எஸ்.பி.ஆர்.எம். நடவடிக்கை எடுத்து வருவதாக எஸ்.பி.ஆர்.எம். புலனாய்வுப்பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹஷிம் தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


