மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, ஒந்நாட்டின் குடியுரிமை பெற மலாய் மொழியைக் கற்றிருப்பது அவசியம் எனக் கூறினார் உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா
மலாய் மொழியை ஒருவர் எவ்வளவு அறிந்திருக்கிறார் என்பதனைச் சோதனை செய்ய எழுத்துத் தேர்வு, வாய்மொழிப் பேட்டி ஆகியவை மேற்கொள்ளப்படும்.
கடந்த நவம்பர் மாதம் வரையில், 32 ஆயிரம் குடியுரிமை விண்ணப்பங்கள் தமது அமைச்சு பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த அக்டோபர் மாதம் வரையில் மட்டுமே, 10 ஆயிரத்து 381 விண்ணப்பங்களின் முடிவுகளை அமைச்சு வெளியிட்டிருப்பதாகவும் அந்த எண்ணிக்கையானது இந்த ஆண்டிற்கான இலக்கைக் காட்டிலும் அதிகம் எனவும் தெரிவித்தார்.








