புரிராம், ஆகஸ்ட் 25-
அனைத்துலக சமூகத்துடன் இணைந்து இலக்கவியல் கல்வித் தரத்தை உயர்த்திக்கொள்வதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட மலேசியா உறுதிப்பூண்டு இருப்பதாக கல்வி அமைச்சர்ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.
குறிப்பாக, இந்த வட்டாரத்தில் கல்விச்சூழலை மாற்றும் முயற்சியில் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து பணியாற்ற மலேசியா தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலேசியா, இலக்கவியல் கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியது. இது முழுக்க முழுக்க இலக்கவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும் என்று அமைச்சர் விளக்கினார்.








