Jul 5, 2026
Thisaigal NewsYouTube
அடையாளக் கார்டு விண்ணப்பச் செயல்முறை மேம்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

அடையாளக் கார்டு விண்ணப்பச் செயல்முறை மேம்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.04-

அமலாக்க முகமை நேர்மை ஆணையமான இஏஐசி, பரிந்துரைத்து இருப்பதைப் போல தேசியப் பதிவு இலாகாவின் அடையாளக் கார்டு விண்ணப்பச் செயல்முறையை மேம்படுத்த உள்துறை அமைச்சு உறுதி பூண்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இஏஐசியின் பரிந்துரை மற்றும் வெளிப்பாட்டை, உள்துறை அமைச்சு மதிப்பதாகவும், அந்த ஆணையம் பரிந்துரைத்ததைப் போல மக்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் சைஃபுடின் விளக்கினார்.

மக்களின் விண்ணப்பங்கள் தோல்வி அடைவதற்கு சில வேளைகளில் ஆவணங்கள் போலியானவை என்பதால் அவற்றைத் தேசியப் பதிவு இலாகா நிராகரித்து இருப்பதையும் சைஃபுடின் சுட்டிக் காட்டினார்.

அதே வேளையில் மகப்பேறு மருத்துவமனையில் உண்மையிலேயே அத்தகையப் பிறப்புப் பதிவு செய்யப்படாத நிலையில் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு அது போலி ஆவணங்களைத் தயார்படுத்திக் கொடுத்து இருப்பதையும் சைஃபுடின் சுட்டிக் காட்டினார்.

நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து வரும் தேசியப் பதிவு இலாகா இது போன்ற விவகாரங்களில் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும் அதனை மேம்படுத்துவதற்கு முன் வைக்கப்படும் எந்தவொரு பரிந்துரையையும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள உள்துறை அமைச்சு தயாராக இருப்பதாக சைஃபுடின் உறுதிக் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது