Mar 27, 2026
Thisaigal NewsYouTube
இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் “நண்பா” திட்டம்
தற்போதைய செய்திகள்

இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் “நண்பா” திட்டம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.22-

தகவல் அமைச்சின் கீழ் செயல்படும் சமூகத் தொடர்புத் துறையான ஜே-கோம் ஏற்பாடு செய்யும் "நண்பா" திட்டம், இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. நாடி அஸ்பிராசி நேசனல் அனாக் மூடா இதன் சுருக்கமே "நண்பா" என்ற தமிழ்ச் சொல் இயம்புகிறது. அரசாங்கக் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சி, எதிர்வரும் ஜூன் 28 ஆம் நாள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை, லெம்பா பந்தாய், IWK இகோ பார்க், மெர்பாவ் மண்டபத்தில் நடைபெறும். தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்ஸீல் இந்த நிகழ்சியைத் தொடக்கி வைக்கிறார். புதையல் வேட்டை, விளக்கக் கூட்டங்கள், அரசு - தனியார் நிறுவனங்களின் சேவை முகப்புகள், வண்ணம் தீட்டும் போட்டி போன்ற பல்வேறு ஈர்க்கக்கூடிய அங்கங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். இதன் மூலம் இந்திய இளைஞர்கள் அரசாங்கத்தின் திட்டங்கள், கொள்கைகள், வாய்ப்புகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதோடு, இணைய அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வையும் பெறுவார்கள்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை