May 18, 2026
Thisaigal NewsYouTube
இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் “நண்பா” திட்டம்
தற்போதைய செய்திகள்

இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் “நண்பா” திட்டம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.22-

தகவல் அமைச்சின் கீழ் செயல்படும் சமூகத் தொடர்புத் துறையான ஜே-கோம் ஏற்பாடு செய்யும் "நண்பா" திட்டம், இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. நாடி அஸ்பிராசி நேசனல் அனாக் மூடா இதன் சுருக்கமே "நண்பா" என்ற தமிழ்ச் சொல் இயம்புகிறது. அரசாங்கக் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சி, எதிர்வரும் ஜூன் 28 ஆம் நாள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை, லெம்பா பந்தாய், IWK இகோ பார்க், மெர்பாவ் மண்டபத்தில் நடைபெறும். தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்ஸீல் இந்த நிகழ்சியைத் தொடக்கி வைக்கிறார். புதையல் வேட்டை, விளக்கக் கூட்டங்கள், அரசு - தனியார் நிறுவனங்களின் சேவை முகப்புகள், வண்ணம் தீட்டும் போட்டி போன்ற பல்வேறு ஈர்க்கக்கூடிய அங்கங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். இதன் மூலம் இந்திய இளைஞர்கள் அரசாங்கத்தின் திட்டங்கள், கொள்கைகள், வாய்ப்புகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதோடு, இணைய அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வையும் பெறுவார்கள்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை