தமது மனைவியை பிரம்பினால் அடித்துக் காயப்படுத்தியதாக பணி ஓய்வுப்பெற்ற நபர் ஒருவர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 65 வயது பி. சுப்பிரமணியம் என்ற அந்த நபர், தமது மனைவி 54 வயதுடைய எஸ். சாந்தகுமாரியை அடித்து கடும் காயங்கள் விளைவித்ததாக நீதிபதி அஜிசா அகமது முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
பி. சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.14 மணியளவில் ஈப்போ, தாமான் பெர்த்தாமா என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் முன்னாள் ஊழியரான சுப்பிரமணியம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.
எனினும் தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து சுப்பிரமணியம் விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவர் ஒரு நபர் உத்தரவாதத்தடன் 6 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


