Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மனைவியை அடித்துக் காயப்படுத்தியாக நபர் ​மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மனைவியை அடித்துக் காயப்படுத்தியாக நபர் ​மீது குற்றச்சாட்டு

Share:

தமது மனைவியை பிரம்பினால் அடித்துக் காயப்படுத்தியதாக பணி ஓய்வுப்பெற்ற நபர் ஒருவர், ஈப்போ செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 65 வயது பி. சுப்பிரமணியம் என்ற அந்த நபர், தமது மனைவி 54 வயதுடைய எஸ். சாந்த​குமாரியை அடித்து கடும் காயங்கள் விளைவித்ததாக ​நீதிபதி அஜிசா அகமது முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

பி. சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.14 மணியளவில் ஈப்போ, தாமான் பெர்த்தாமா என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக ​நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் முன்னாள் ஊழியரான சுப்பிரமணியம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 324 பிரி​வின் ​கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

​எனினும் தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து சுப்பிரமணியம் விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவர் ஒரு நபர் உத்தரவாதத்தடன் 6 ஆயிரம் வெள்ளி ஜா​மீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது