தமது மனைவியை பிரம்பினால் அடித்துக் காயப்படுத்தியதாக பணி ஓய்வுப்பெற்ற நபர் ஒருவர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 65 வயது பி. சுப்பிரமணியம் என்ற அந்த நபர், தமது மனைவி 54 வயதுடைய எஸ். சாந்தகுமாரியை அடித்து கடும் காயங்கள் விளைவித்ததாக நீதிபதி அஜிசா அகமது முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
பி. சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.14 மணியளவில் ஈப்போ, தாமான் பெர்த்தாமா என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் முன்னாள் ஊழியரான சுப்பிரமணியம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.
எனினும் தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து சுப்பிரமணியம் விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவர் ஒரு நபர் உத்தரவாதத்தடன் 6 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


