தமது மனைவியை பிரம்பினால் அடித்துக் காயப்படுத்தியதாக பணி ஓய்வுப்பெற்ற நபர் ஒருவர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 65 வயது பி. சுப்பிரமணியம் என்ற அந்த நபர், தமது மனைவி 54 வயதுடைய எஸ். சாந்தகுமாரியை அடித்து கடும் காயங்கள் விளைவித்ததாக நீதிபதி அஜிசா அகமது முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
பி. சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.14 மணியளவில் ஈப்போ, தாமான் பெர்த்தாமா என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் முன்னாள் ஊழியரான சுப்பிரமணியம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.
எனினும் தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து சுப்பிரமணியம் விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவர் ஒரு நபர் உத்தரவாதத்தடன் 6 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


