கல்லுடைப்பு பணியின் போது மண்வாரி இயந்திரம் குடை சாய்ந்து, பள்ளத்தில் விழுந்ததில் அதனை இயக்கிக்கொண்டிருந்த இரு வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் ஈப்போ அருகில் சிம்பாங் பூலாய், கம்போங் கெப்பாயாங், கிராமட் பூலாய் கல்லுடைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.
அந்தக் கன ரக இயந்திரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த இரு வங்காள தேசத்தொழிலாளர்களும், சம்பவ இடத்திலேயே மாண்டனர் என்று சிம்பாங் பூலாய், தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் செயலாக்கத் தலைவர் முகமட் சப்ரி யோப் முகமட் தெரிவித்தார்.
இது தொடர்பாக இரவு 8.17 மணியளவில், ஓர் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்த போது, குடை சாய்ந்த மண்வாரி இயந்திரத்தின் அடியில் அவ்விரு தொழிலாளர்களும் சிக்கி கிடந்தது தெரியவந்ததாக முகமட் சப்ரி குறிப்பிட்டார்.
அந்த கல்லுடைப்பு நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு கனரக வாகனம் கொண்டு வரப்பட்டு, குடை சாய்ந்த மண் வாரி இயந்திரம் அகற்றப்பட்டு, அவ்விரு தொழிலாளர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. 30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அவ்விரு தொழிலாளர்களின் உடல்களும் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக முகமட் சப்ரி தெரிவித்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


