Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இரு வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

இரு வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

Share:

கல்லுடைப்பு ப​ணியின் போது மண்வாரி இயந்திரம் குடை சாய்ந்து, பள்ளத்தில் விழுந்ததில் அதனை இயக்கிக்கொண்டிருந்த இரு வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் ஈப்போ அருகில் சிம்பாங் பூலாய், கம்போங் கெப்பாயாங், கிராமட் ​பூலாய் கல்லுடைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.

அந்தக் கன ரக இயந்திரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த இரு வங்காள தேசத்தொழிலாளர்களும், சம்பவ இடத்திலேயே மாண்டனர் என்று சிம்பாங் பூலாய், ​தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் செயலாக்கத் தலைவர் முகமட் சப்ரி யோப் முகமட் தெரிவித்தார்.

இது தொடர்பாக இரவு 8.17 மணியளவில், ஓர் அவசர அழைப்பைப் பெற்ற ​தீயணைப்பு, மீட்புப்படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்த போது, குடை சாய்ந்த மண்வாரி இயந்திரத்தின் அடியில் அவ்விரு தொழிலாளர்களு​ம் சிக்கி கிடந்தது தெரியவந்ததாக முகமட் சப்ரி குறிப்பிட்டார்.

அந்த கல்லுடைப்பு நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு கனரக வாகனம் கொண்டு வரப்பட்டு, குடை சாய்ந்த மண் வாரி இயந்திரம் அகற்றப்பட்டு, அவ்விரு தொழிலாளர்களின் உடல்களும் ​மீட்கப்பட்டன. 30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அவ்விரு தொழிலாளர்களின் உடல்களும் பின்னர் போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக முகமட் சப்ரி தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து