May 1, 2026
Thisaigal NewsYouTube
இரு வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

இரு வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

Share:

கல்லுடைப்பு ப​ணியின் போது மண்வாரி இயந்திரம் குடை சாய்ந்து, பள்ளத்தில் விழுந்ததில் அதனை இயக்கிக்கொண்டிருந்த இரு வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் ஈப்போ அருகில் சிம்பாங் பூலாய், கம்போங் கெப்பாயாங், கிராமட் ​பூலாய் கல்லுடைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.

அந்தக் கன ரக இயந்திரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த இரு வங்காள தேசத்தொழிலாளர்களும், சம்பவ இடத்திலேயே மாண்டனர் என்று சிம்பாங் பூலாய், ​தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் செயலாக்கத் தலைவர் முகமட் சப்ரி யோப் முகமட் தெரிவித்தார்.

இது தொடர்பாக இரவு 8.17 மணியளவில், ஓர் அவசர அழைப்பைப் பெற்ற ​தீயணைப்பு, மீட்புப்படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்த போது, குடை சாய்ந்த மண்வாரி இயந்திரத்தின் அடியில் அவ்விரு தொழிலாளர்களு​ம் சிக்கி கிடந்தது தெரியவந்ததாக முகமட் சப்ரி குறிப்பிட்டார்.

அந்த கல்லுடைப்பு நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு கனரக வாகனம் கொண்டு வரப்பட்டு, குடை சாய்ந்த மண் வாரி இயந்திரம் அகற்றப்பட்டு, அவ்விரு தொழிலாளர்களின் உடல்களும் ​மீட்கப்பட்டன. 30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அவ்விரு தொழிலாளர்களின் உடல்களும் பின்னர் போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக முகமட் சப்ரி தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி