Jun 15, 2026
Thisaigal NewsYouTube
இரு வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

இரு வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

Share:

கல்லுடைப்பு ப​ணியின் போது மண்வாரி இயந்திரம் குடை சாய்ந்து, பள்ளத்தில் விழுந்ததில் அதனை இயக்கிக்கொண்டிருந்த இரு வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் ஈப்போ அருகில் சிம்பாங் பூலாய், கம்போங் கெப்பாயாங், கிராமட் ​பூலாய் கல்லுடைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.

அந்தக் கன ரக இயந்திரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த இரு வங்காள தேசத்தொழிலாளர்களும், சம்பவ இடத்திலேயே மாண்டனர் என்று சிம்பாங் பூலாய், ​தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் செயலாக்கத் தலைவர் முகமட் சப்ரி யோப் முகமட் தெரிவித்தார்.

இது தொடர்பாக இரவு 8.17 மணியளவில், ஓர் அவசர அழைப்பைப் பெற்ற ​தீயணைப்பு, மீட்புப்படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்த போது, குடை சாய்ந்த மண்வாரி இயந்திரத்தின் அடியில் அவ்விரு தொழிலாளர்களு​ம் சிக்கி கிடந்தது தெரியவந்ததாக முகமட் சப்ரி குறிப்பிட்டார்.

அந்த கல்லுடைப்பு நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு கனரக வாகனம் கொண்டு வரப்பட்டு, குடை சாய்ந்த மண் வாரி இயந்திரம் அகற்றப்பட்டு, அவ்விரு தொழிலாளர்களின் உடல்களும் ​மீட்கப்பட்டன. 30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அவ்விரு தொழிலாளர்களின் உடல்களும் பின்னர் போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக முகமட் சப்ரி தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்