கோலாலம்பூர், செப்டம்பர் 30-
ஓர் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, 39 மாத காலத்திற்கு பிறகு இன்று உச்சத்தை தொட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய பணவீக்க விகித தரவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் விளைவாக ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைய தொங்கியுள்ளது.
இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த அந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் ஓர் அமெரிக்க டாலருக்கு 4 வெள்ளி 12 காசாக பதிவுவாகியுள்ளது. இது கடந்த 39 மாதங்களுக்குப் பிறகு உச்சத்தை தொட்ட விகிதமாகும். ரிங்கிட் மதிப்பின் ஏறுமுகம், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாக நாட்டின் முன்னணி நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.








