Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் மனை வரி 29 % முதல் 200 % வரை உயர்கிறது
தற்போதைய செய்திகள்

பினாங்கில் மனை வரி 29 % முதல் 200 % வரை உயர்கிறது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.19-

பினாங்கு மாநிலத்தில் பல்வேறு நில வகைகளுக்கான வீட்டு வரி மற்றும் மனை வரி அடுத்த ஆண்டு 29 விழுக்காடு முதல் 200 விழுக்காடு வரை உயர்வு காணவிருக்கிறது.

எனினும் இந்த வரி உயர்வைக் குறைக்கச் செலுத்தப்படும் வரியில் 2026 ஆம் ஆண்டு 32.5 விழுக்காடு தள்ளுபடியும், 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் முறையே 20 விழுக்காடு தள்ளுபடியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.

இந்த மனை வரி உயர்வில் பினாங்கு மாநிலத்தில் உள்ள 3 லட்சத்து 70 ஆயிரம் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநிலத்தில் நகரங்கள் மற்றும் புற நகரங்களில் எல்லை மறு சீரமைப்பு நடவடிக்கையின் விளைவாக வரி உயர்வு கண்டுள்ளது என்று சோவ் கோன் யோவ் விளக்கினார்.

இந்த வரி உயர்வு, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து