Mar 15, 2026
Thisaigal NewsYouTube
தப்பி ஓடிய நால்வர் - பெண் கைது, மூவர் தேடப்படுகிறார்கள்
தற்போதைய செய்திகள்

தப்பி ஓடிய நால்வர் - பெண் கைது, மூவர் தேடப்படுகிறார்கள்

Share:

ரெம்பாவ், ஜன - 8,

ரெம்பாவ், கம்போங் ரெலோங்கில் இல் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது காவல் துறையின் ரோந்து பிரிவிடம் இருந்து மூவர் தப்பி ஓடிய நிலையில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகிக்கும் வகையில் புரோட்டோன் வீரா வகை காரின் செயல்பாடுகள் இருந்த நிலையில், அதனை நிறுத்த போலீஸ் முற்பட்டது. அவர்களிடம் சிக்காமல் தப்பிக்க கார் வேகமாக செலுத்தப்பட்டது, அந்தக் கார் இறுதியில் வழி யில்லாத முட்டுச் சந்தை அடைந்தது. தப்பிக்க வழி இல்லாத நிலையில், வந்த வழியிலேயே தப்பிக்கும்போது, போலீஸ் வாகனத்தை மோதித் தள்ளியது.

பாதையில் இடது புறத்தில் விழுந்த அந்த புரோட்டோன் வீரா காரில் இருந்து மூவர் தப்பித்த நிலையில், ஒரு பெண் மட்டும் கைது செய்யப்பட்டார் என ரெம்பாவ் போலீஸ் தலைவர் ஹஸ்ரி முகம்மட் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த பெண்மணியின் வயது 31 எனவும் தேடப்பட்டு வரும் மூவரில் இருவருக்கு முறையே 26 மற்றும் 31 வயது எனத் தெரிவிக்கப்பட்டது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்