Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மாசாய் உணவகத்தில் நடந்த சண்டை: எட்டு பேர் கைது
தற்போதைய செய்திகள்

மாசாய் உணவகத்தில் நடந்த சண்டை: எட்டு பேர் கைது

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.22-

ஜோகூர், மாசாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நடந்த மோதல் தொடர்பாக எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாசாய், பண்டார் பாரு பெர்மாஸ் ஜெயா பகுதியில் உள்ள ஒரு சீன உணவகத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.

சுமார் 20 பேர் கொண்ட கும்பல், பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் பாட்டில்களைப் பயன்படுத்தி இரண்டு நபர்களைத் தாக்கியது. இதில் ஒருவருக்கு முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் 17 முதல் 46 வயதுக்குட்பட்ட ஏழு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஜோகூர் பேரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் பொறாமை காரணமாக இந்த மோதல் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக சந்தேக நபர்களிடமிருந்து ஏழு கைபேசிகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து