May 6, 2026
Thisaigal NewsYouTube
மாசாய் உணவகத்தில் நடந்த சண்டை: எட்டு பேர் கைது
தற்போதைய செய்திகள்

மாசாய் உணவகத்தில் நடந்த சண்டை: எட்டு பேர் கைது

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.22-

ஜோகூர், மாசாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நடந்த மோதல் தொடர்பாக எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாசாய், பண்டார் பாரு பெர்மாஸ் ஜெயா பகுதியில் உள்ள ஒரு சீன உணவகத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.

சுமார் 20 பேர் கொண்ட கும்பல், பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் பாட்டில்களைப் பயன்படுத்தி இரண்டு நபர்களைத் தாக்கியது. இதில் ஒருவருக்கு முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் 17 முதல் 46 வயதுக்குட்பட்ட ஏழு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஜோகூர் பேரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் பொறாமை காரணமாக இந்த மோதல் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக சந்தேக நபர்களிடமிருந்து ஏழு கைபேசிகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்