May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தேங்காய் விநியோகம் போதுமானதாக இருக்கும்

Share:

ஜோகூர் பாரு, பிப்.16-

இரமலான் மாதத்திற்கு தேங்காய் விநியோகம் போதுமானதாக இருக்கும் என்று FAMA உறுதியளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக இந்த உறுதிப்பாடு கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் இந்தோனேசியா, சபா, சரவாக்கிலிருந்து மாதம் 640 மெட்ரிக் டன் தேங்காய்களை தீபகற்ப மலேசியாவுக்கு கொண்டு வருவது அடங்கும். இந்தோனேசியாவிலிருந்து விநியோகம் கடந்த ஆண்டின் இறுதியில் தொடங்கியது, அதே சமயம் சபா, சரவாக்கிலிருந்து பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஏற்பட்ட தேங்காய் விநியோக நெருக்கடி வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டதாக FAMAவின் உணவுப் பாதுகாப்பு, செயல்முறை பிரிவின் உதவி இயக்குநர் ஷாரிசான் சுடிமான் கூறினார்.

தேங்காய் விநியோகப் பிரச்சினை நாடு முழுவதும் அனுபவிக்கப்பட்டாலும், கிழக்கு கடற்கரை மாநிலங்களில், குறிப்பாக கிளந்தானில், தேங்காய்களின் அதிக பயன்பாடு காரணமாக இது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது என்று ஷாரிசான் சுடிமான் தெரிவித்தார். இதுவரை இல்லாத அளவுக்கு பருவநிலை மோசமாக இருந்தது என்றும், காலநிலை மாற்ற காரணிகளால் தென்னை சாகுபடித் தொழிலைப் பாதித்தது என்றும் அவர் கூறினார். காலநிலை காரணிகள் தவிர, கடந்த 30 ஆண்டுகளில் நாட்டில் தென்னை நடவு செய்யும் பகுதிகளின் குறிப்பிடத்தக்க குறைவால் உள்ளூர் வினியோகம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Related News