Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கம்போங் பாப்பான் குடியிருப்பாளர்களுக்கு மலிவு விலை வீடுகள் வழங்கப்படும் – சிலாங்கூர் மந்திரி பெசார் உறுதி
தற்போதைய செய்திகள்

கம்போங் பாப்பான் குடியிருப்பாளர்களுக்கு மலிவு விலை வீடுகள் வழங்கப்படும் – சிலாங்கூர் மந்திரி பெசார் உறுதி

Share:

ஷா ஆலாம், நவம்பர்.15-

கோலக்கிள்ளான், பண்டமாரான், கம்போங் ஜாலான் பாப்பான் குடியிருப்புப் பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு, மலிவு விலை வீடுகள் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

Permodalan Negeri Selangor Bhd-ஆல் உருவாக்கப்படவுள்ள மலிவு விலை வீடமைப்பில் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

நேற்று காலை Melati Ehsan Consolidated Sdn Bhd என்ற கட்டுமான நிறுவனத்திடம் மேம்பாட்டுத் திட்டத்திற்காக 7 ஏக்கர் நிலம் வழங்கப்பட்ட போது, இந்த விவகாரம் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

என்றாலும், இது ஒரு விரிவான மேம்பாட்டுத் திட்டம் என்பதால், அது நிறைவடைய சில காலம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ள அமிருடின் ஷாரி, அதுவரையில் தற்காலிகமாக அவர்களுக்கு ஸ்மார்ட் சேவா வீட்டு வசதித் திட்டத்தில் இடம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கம்போங் பாப்பான் நில உரிமை விவகாரம், நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படாமல் இருந்திருந்தால், சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கும் என்றும் அமிருடின் ஷாரி நேற்று 2026 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜட் தாக்கலுக்குப் பிறகு தெரிவித்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்