Jun 29, 2026
Thisaigal NewsYouTube
திரங்கானு கார் விபத்து: சாலைத் தடுப்பை அகற்றிய மர்ம நபர்களைத் தேடுகிறது பொதுப்பணித்துறை
தற்போதைய செய்திகள்

திரங்கானு கார் விபத்து: சாலைத் தடுப்பை அகற்றிய மர்ம நபர்களைத் தேடுகிறது பொதுப்பணித்துறை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.08-

திரங்கானுவில் வாகனம் ஒன்று சாலையை விட்டு விலகி, பாதாளத்தில் விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில், சாலைத் தடுப்பை அகற்றியது யார்? என்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சு விசாரணை நடத்தி வருகின்றது.

இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்படி பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றியே, பொதுப்பணித்துறை இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட அலெக்ஸண்டர், அங்கு வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பும், எச்சரிக்கைப் பலகையும், சில பொறுப்பற்ற நபர்களால் அகற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கோல பெராங், ஜாலான் கோல ஜெனெரிஸ் - சுங்கை காவி - ஆரிங் சாலையின் 52 ஆவது கிலோமீட்டரில் இவ்விபத்தானது நிகழ்ந்தது.

இதில் 52 வயது ஹசான் ஷாஸாலி மற்றும் 34 வயது சுஸைமா சே அஸிஸ் ஆகியோர் பயணம் செய்த Toyota Fortuner வாகனம், சுமார் 60 மீட்டர் பாதாளத்தில் விழுந்து, இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு