May 6, 2026
Thisaigal NewsYouTube
திரங்கானு கார் விபத்து: சாலைத் தடுப்பை அகற்றிய மர்ம நபர்களைத் தேடுகிறது பொதுப்பணித்துறை
தற்போதைய செய்திகள்

திரங்கானு கார் விபத்து: சாலைத் தடுப்பை அகற்றிய மர்ம நபர்களைத் தேடுகிறது பொதுப்பணித்துறை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.08-

திரங்கானுவில் வாகனம் ஒன்று சாலையை விட்டு விலகி, பாதாளத்தில் விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில், சாலைத் தடுப்பை அகற்றியது யார்? என்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சு விசாரணை நடத்தி வருகின்றது.

இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்படி பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றியே, பொதுப்பணித்துறை இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட அலெக்ஸண்டர், அங்கு வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பும், எச்சரிக்கைப் பலகையும், சில பொறுப்பற்ற நபர்களால் அகற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கோல பெராங், ஜாலான் கோல ஜெனெரிஸ் - சுங்கை காவி - ஆரிங் சாலையின் 52 ஆவது கிலோமீட்டரில் இவ்விபத்தானது நிகழ்ந்தது.

இதில் 52 வயது ஹசான் ஷாஸாலி மற்றும் 34 வயது சுஸைமா சே அஸிஸ் ஆகியோர் பயணம் செய்த Toyota Fortuner வாகனம், சுமார் 60 மீட்டர் பாதாளத்தில் விழுந்து, இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்