Aug 12, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது - பிரதமர் பெருமிதம்
தற்போதைய செய்திகள்

ஆசியான் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது - பிரதமர் பெருமிதம்

Share:

கோலாலம்பூர், மே.29-

46வது ஆசியான் உச்சநிலை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்தார். இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் படைகள், தன்னார்வலர்களோடு பிற பிரிவினரும் சிறப்பாகப் பணியாற்றியதாக அவர் பாராட்டினார்.

இந்த உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற நிகராளிகளும் தலைவர்களும் மலேசியாவின் ஏற்பாடுகள், ஒழுக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பாராட்டியுள்ளதாக அன்வார் குறிப்பிட்டார். அனைத்துலகத் தரத்திலான கலாச்சார நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினர்களைக் கவர்ந்ததாகவும், இது மலேசியாவின் குழுப் பணியின் வலிமைக்கு ஒரு சான்றாகும் என்றும் அவர் கூறினார்.

Related News