தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். சந்தாதார்கள், தங்கள் சேமிப்புப்பணத்தை எந்த நேரத்திலும் மீட்டுக்கொள்வதற்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ள நெகிழ்வான இபிஎப். கணக்கு அல்லது மூன்றாவது கணக்கு திறக்கப்படும் திட்டம், உதவித் தேவைப்படக்கூடிய இலக்குக்குரிய சந்தாதார்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒன்றாவது கணக்கு, இரண்டாது கணக்கு ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது கணக்கு ஒன்று திறக்கப்படுமானல் சந்தாதாரர்கள் ஒவ்வொரு கணக்கிலும் சேர்த்து வைக்கும் மொத்த சேமிப்பு மிகச்சிறிதாகி விடும்.
சந்தாதார்களக்கு மூன்றாது கணக்கை திறக்கச் சொல்லி, அதில் ஒரு சேமிப்பை நிரப்பி, அந்த பணத்தின் வாயிலாக உதவிக்கரம் நீட்டுவதை விட நடப்பு கணக்கில் இலக்குக்குரிய சந்தாதாரர்கள் தங்கள் பணத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டை மீட்டுக்கொள்ள அனுமதித்தால் இது பல பிரச்கனைகளுக்கு தீர்வு காண உதவும் என்று தாசெக் கெலுகோர், பெரிக்காத்தான் எம்.பி. வான் சைஃபுல் வான் ஜார் தெரிவித்துள்ளார்.








