Jul 4, 2026
Thisaigal NewsYouTube
காப்பார் ஸ்நூக்கர் மையத்தில் கொள்ளை: அறுவரைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

காப்பார் ஸ்நூக்கர் மையத்தில் கொள்ளை: அறுவரைப் போலீஸ் தேடுகிறது

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.01-

சிலாங்கூர், காப்பார் நகரில் உள்ள ஒரு ஸ்நூக்கர் மையத்தில் பாராங் ஏந்திய கும்பல் ஒன்று கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஆறு நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது.

நேற்று இரவு 7 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள வேளையில், அந்த ஆறு நபர்களையும் போலீசார அடையாளம் கண்டு வருவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் தெரிவித்தார்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்ததாக நம்பப்படும் 6 ஆடவர்களில் மூவர், வெளியே காத்திருக்க, இதர மூவர் பாராங் ஏந்திய நிலையில் இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர் என்று விஜயராவ் குறிப்பிட்டார்.

ஸ்நூக்கர் மையத்தில் இருந்தவர்களிடம் 823 ரிங்கிட்டை இந்தக் கும்பல் பறித்துச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று விஜயராவ் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது