Dec 4, 2025
Thisaigal NewsYouTube
காப்பார் ஸ்நூக்கர் மையத்தில் கொள்ளை: அறுவரைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

காப்பார் ஸ்நூக்கர் மையத்தில் கொள்ளை: அறுவரைப் போலீஸ் தேடுகிறது

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.01-

சிலாங்கூர், காப்பார் நகரில் உள்ள ஒரு ஸ்நூக்கர் மையத்தில் பாராங் ஏந்திய கும்பல் ஒன்று கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஆறு நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது.

நேற்று இரவு 7 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள வேளையில், அந்த ஆறு நபர்களையும் போலீசார அடையாளம் கண்டு வருவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் தெரிவித்தார்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்ததாக நம்பப்படும் 6 ஆடவர்களில் மூவர், வெளியே காத்திருக்க, இதர மூவர் பாராங் ஏந்திய நிலையில் இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர் என்று விஜயராவ் குறிப்பிட்டார்.

ஸ்நூக்கர் மையத்தில் இருந்தவர்களிடம் 823 ரிங்கிட்டை இந்தக் கும்பல் பறித்துச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று விஜயராவ் தெரிவித்தார்.

Related News