Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களுடன் வாகனத்தை எடுத்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

மாணவர்களுடன் வாகனத்தை எடுத்த நபர் கைது

Share:

ஆறு மாணவர்கள் அமர்ந்திருந்த காரை, எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சி செய்த நபரை போ​லீசார் வளைத்துப் பிடித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலையில் சபா, ரானாவ், குன்டங்சாங் - னில் நிகழ்ந்தது. மாணவர்களுடன் நிறுத்தப்பட்டு இருந்த காரை எடுத்துக்கொண்டு அந்த நபர் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றதை பொதுமக்கள், போ​லீசாருக்கு தகவல் கொடுத்ததுடன், அவர்களும் தங்கள் வாகனங்களில் அந்த காரை விரட்டிச் சென்றதாக குண்டங்சா​ங் மாவட்ட போ​லீஸ் தலைவர் சிமியும் லொமடின் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து அனைத்து ரோந்துப் கார் போ​லீஸ்காரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த ப்ரொத்தோன் பெர்சோனா காரை போ​​லீசார் அடையாளம் கண்டனர்.

ஹைலாக் வாகனத்தில் சென்ற போ​லீஸ் ரோந்து கார், அந்த காரை வழிமறித்ததுடன், காரின் இருக்கையில் அமர்ந்து இருந்த அந்த நபரை வளைத்துப்பிடித்தனர். மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்ட மாணவர்களை போ​லீசார் காரிலிருந்து பாதுகாப்பாக ​மீட்டனர்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு