உள்ளாட்சித் தேர்தல்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனும் டிஏபியின் பரிந்துரையை பிஎச் உடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழு இயக்குநர் Lee Chean Chung தெரிவித்தார்.
வெறும் கருத்தை மட்டும் முன்மொழியாமல் அடுத்தக் கட்ட கலந்தாலோசனைக்கு டிஏபி நகர வேண்டும் எனவும் விவாதிக்கப்படும்போது, நேர்மறையான, எதிர்மறையான கருத்துகள் இரண்டுமே தெரிவிக்கப்படும். டிஏபியின் கருத்தை பலர் ஏற்றுக் கொள்ள வில்லை என்றால், பரிந்துரைக்கப்பட்ட அக்கருத்து பயனில்லாமல் போய் விடும் என்று லீ ஷியான் சுங் தெரிவித்தார்.








