வரும் சுங்கை பகாப் இடைத் தேர்தலில் மூடா கட்சியும், உரிமை கட்சியும் தனது வேட்பாளர்களை நிறுத்தாது என்று அறிவித்துள்ளன.
இந்த இடைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடவில்லை என்ற போதிலும் தொகுதி வாக்காளர்கள் விவேகமான முடிவை எடுப்பதற்கு தேவையான விளக்க உரைகளை வழங்கும் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக அவ்விரு கட்சிகளும் தெரிவித்துள்ள.
சுங்கை பகாப் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த இடைத் தேர்தல் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் பலப்பரீட்சைக்கான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








