May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலைத் திட்டம், லஞ்சம் வாங்கியதாக நிர்வாகி மீது குற்றச்சாட்டு

Share:

ஜோகூர்பாரு, ஜன.23-

கட்டுமானம் நிறுவனம் ஒன்றுக்கு நெடுஞ்சாலை நிர்மாணிப்பத் திட்டத்தை பெற்றுக் கொடுப்பதற்கு கைமாறாக 50 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தை கையூட்டதாகப் பெற்றதாக நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் துணை நிறுவன நிர்வாகி ஒருவர் ஜோகூர்பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

47 வயது சைருல்நிஸாம் ரொஹானி என்ற அந்த நபர், நீதிபதி சித்தி நொராய்டா சுலைமான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 7,12, 13 ஆகிய தேதிகளில் ஜோகூர்பாரு, தாமான் யூனிவெர்சிட்டியில் உள்ள உள்ளுர் வங்கியில் சைருல்நிஸாம் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனது மனைவியின் வங்கிக் கணக்கில் மூன்று கட்டங்களாக இந்த கையூட்டுத் தொகையை சைருல்நிஸாம் பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை அந்த நிர்வாகி மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

நெடுஞ்சாலைத் திட்டம், லஞ்சம் வாங்கியதாக நிர்வாகி மீது குற... | Thisaigal News