Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தோட்டத் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடுகள்
தற்போதைய செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடுகள்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அதிகம் தோட்டங்களைக் கொண்ட பகாவ் பகுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடுகளைக் கட்டுவற்கு மாநில அரசு திட்டம் வகுத்துள்ளதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினரக்சியூவ் செ யொங் தெரிவித்துள்ளார்.


நேற்று நெகிரி செம்பிலான் மாநில அரசு அலுவலகத்தில் நடைபெற்ற மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மனித வள துறை அமலாக்க அதிகாரிகள், நெகிரி செம்பிலானில் உள்ள 32 தோட்டங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசாங்க அமலாக்க அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் போது மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இந்த தகவலை தெரிவித்ததாக மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க செயலாளர் சாந்தகுமார் பச்சையப்பன் கூறினார்.

ஒரு தோட்டம் மேம்பாடு காணும் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டாயம் சொந்த வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு நடப்பு சட்டத்தில் இடம் உண்டு. அந்த வகையில் பகாவ் வட்டாரத்தில் ஒரு வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கும் பொருட்டு தோட்டத் தொழிலாளர்களின் தரவுகள் சேகரிக்குமாறு மாநில அரச பரிந்துரை செய்துள்ளது.

அந்த கணக்கெடுப்பபில், எத்தனை தோட்டத் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடுகள் தேவை என்பது குறித்து மாநில அரசிடம் மகஜர் வழங்கப்படும் என்று சாந்தகுமார் பச்சையப்பன் தெரிவித்தார்.
தவிர தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார சுமையைக் குறைக்க தோட்டங்கள் தோறும் பச்சை புத்தகத் திட்டத்தை விரைந்து அமல்படுத்துமாறு தாம் கேட்டுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு