Dec 2, 2025
Thisaigal NewsYouTube
முன்னாள் நீதித்துறை ஆணையர் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

முன்னாள் நீதித்துறை ஆணையர் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு

Share:

பெட்டாலிங் ஜெயா, நவம்பர்.11-

28 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கில் பலவந்தத்தைப் பயன்படுத்தியாக முன்னாள் நீதித்துறை ஆணையர் ஒருவர் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

63 வயது டத்தோ முகமட் ஷாரிஃப் அபு சமா என்ற அந்த முன்னாள் நீதித்துறை ஆணையர், மாஜிஸ்திரேட் ஃபாரா அஸுரா முகமட் சாஅட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி மாலை 4 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, Jalan Profesor Diraja Ungku Aziz, காம்ப்ளெக்ஸ் ஜெயா, செக்‌ஷன் 16 இல் உள்ள ஒரு வர்த்தகத் தளத்தின் கார் நிறுத்தும் இடத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த முன்னாள் நீதித்துறை ஆணையர் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் மூவாயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்