Mar 27, 2026
Thisaigal NewsYouTube
நகையை களவாடிய அந்த மாதுவை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

நகையை களவாடிய அந்த மாதுவை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

செலாயாங், ஆகஸ்ட் 29-

அண்மையில் செலாயாங்- கில் உள்ள ஒரு நகைக்கடையில் இரண்டு தங்கச் சங்கிலியை களவாடியப்பின்னர் ஓட்டம் பிடித்த மாது ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் நடைக்கடையின் 33 வயது உரிமையாளரிடமிந்து புகார் பெறப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் ஆரிஃபின் முகமது தெரிவித்தார்.

உள்ளூரைச் சேர்ந்த அந்த மாது, நகைகளை வாங்குவதைப் போல் பாவனை செய்தப்பின்னர் மின்னல் வேகத்தில் அந்த இரண்டு தங்கச் சங்கிலியை திருடிக்கொண்டு, கடையின் முன் தயாராக காத்திருந்து வெள்ளை நிற Toyota Yaris காரில் தப்பிச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட மாது. தங்கச் சங்கிலியை திருடிக்கொண்டு, காரை நோக்கி ஓடும் காட்சி, ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த 34 வினாடி காணொளியின் வாயிலாக சம்பந்தப்பட்ட மாதுவை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ஏசிபி நூர் மேலும் கூறினார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 380 ஆவது பிரிவின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

மலேசியாவில் கடும் வெப்ப அலை:  பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

மலேசியாவில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்