மாச்சங், ஜூலை 05-
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கிளந்தான், நீங்கிரி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், அம்னோவின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பு இளம் வேட்பாளருக்கு வழங்கப்பட வேண்டுமென, அம்னோ இளைஞர் பிரிவு எதிர்பார்ப்பை முன்வைத்துள்ளது.
வாக்காளர்களை அணுகி, தகவல்களை கொண்டு சேர்ப்பதிலும் சம்பந்தப்பட்ட தொகுதியை மேம்படுத்துவதிலும், இளம் வேட்பாளரே ஏற்புடையவராக இருப்பார் என அப்பிரிவின் தலைவர் டாக்டர் முகம்மது அக்மல் சாலிஹ் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அம்னோவின் அரசியல் பிரிவின் வாயிலாக, தங்கள் தரப்பிலுள்ள இளம் வேட்பாளரின் பெயர் குறித்து, கிளந்தான் அம்னோ தலைமையுடன் விவாதிக்கப்படும்
அதன் பின்னரே, அவ்விவகாரம், அம்னோவின் உயர்மட்ட தலைமைத்துவத்திடம் கொண்டு செல்லப்படும் எனவும் அக்மல் சாலிஹ் கூறினார்.








