Jul 31, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு 7 நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு 7 நாள் தடுப்புக்காவல்

Share:

ஒரு விரிவுரையாளரான தனது மனைவியை எடைத்தூக்கும் Dumbel லினனால் அடித்து கொன்றதாக நம்பப்படும் 38 வயதுடைய ஆடவரை, விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு ஷா ஆலாம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சுய தொழில் செய்து வந்தவரான அந்த ஆடவர் இன்று காலையில் துணை பதிவதிகாரி சௌததுல் அக்மர் சுபேரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலுக்கான அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் ஷா ஆலம், ஜாலான் சுங்கை காங்காக் என்ற இடத்தில் உள்ள தங்கள் வீட்டில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சரவாவில் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி 33 வயதுடைய பெண் உயிரிழந்தார்..

சம்பவம் நிகழ்ந்த போது அந்த பெண் விரிவுரையாளரின் கணவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது..

Related News