சிங்கப்பூருக்கு சென்று தம் மகள் நோர்யான நஜ்வா முஹமாட் நஜிப்பையும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் பார்ப்பதற்கு தமது அனைத்துலக கடப்பிதழை தற்காலிகமாக ஒப்படைக்கும்படி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் செய்த கொண்ட விண்ணப்பத்திற்கு புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி ஹடாரியா ஷெட் இஸ்மாயில், கடப்பிதழை ஒப்படைப்பதற்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்தார்.
நாளை ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையும், பின்னர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையும், அதன் பின்னர் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையும் ரோஸ்மா மன்சோர் சிங்கப்பூரில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவரின் வழக்கறிஞர் ஸ்லாகிட் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரோஸ்மாவின் இந்த விண்ணப்பத்திற்கு பிராசிகியூஷன் தரப்பு, எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

Related News

மின்சாரம் தாக்கி 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு: முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

மாநில அளவிலான BN-PN கூட்டணி கூட்டரசு அரசாங்கத்தைப் பாதிக்காது: ஃபஹ்மி ஃபாட்சில் உறுதி

மின்சாரம் தாக்கி மூன்று போலீஸ் அதிகாரிகள் பரிதாப மரணம்

மலாக்கா மாநிலத் தேர்தல்: அவசரப்பட்டு மோத வேண்டாம், முதலில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அகமத் மஸ்லான் அறிவுறுத்தல்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்


