சிங்கப்பூருக்கு சென்று தம் மகள் நோர்யான நஜ்வா முஹமாட் நஜிப்பையும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் பார்ப்பதற்கு தமது அனைத்துலக கடப்பிதழை தற்காலிகமாக ஒப்படைக்கும்படி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் செய்த கொண்ட விண்ணப்பத்திற்கு புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி ஹடாரியா ஷெட் இஸ்மாயில், கடப்பிதழை ஒப்படைப்பதற்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்தார்.
நாளை ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையும், பின்னர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையும், அதன் பின்னர் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையும் ரோஸ்மா மன்சோர் சிங்கப்பூரில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவரின் வழக்கறிஞர் ஸ்லாகிட் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரோஸ்மாவின் இந்த விண்ணப்பத்திற்கு பிராசிகியூஷன் தரப்பு, எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


