சிங்கப்பூருக்கு சென்று தம் மகள் நோர்யான நஜ்வா முஹமாட் நஜிப்பையும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் பார்ப்பதற்கு தமது அனைத்துலக கடப்பிதழை தற்காலிகமாக ஒப்படைக்கும்படி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் செய்த கொண்ட விண்ணப்பத்திற்கு புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி ஹடாரியா ஷெட் இஸ்மாயில், கடப்பிதழை ஒப்படைப்பதற்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்தார்.
நாளை ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையும், பின்னர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையும், அதன் பின்னர் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையும் ரோஸ்மா மன்சோர் சிங்கப்பூரில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவரின் வழக்கறிஞர் ஸ்லாகிட் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரோஸ்மாவின் இந்த விண்ணப்பத்திற்கு பிராசிகியூஷன் தரப்பு, எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

Related News

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.


