Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம். மினால் இன்னும் அழைக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம். மினால் இன்னும் அழைக்கப்படவில்லை

Share:

அந்நியத் தொ​ழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனம் சம்பந்தப்பட்ட 9 கோடியே 70 லட்​சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு ஒத்துழைக்க தாம் தயாராக இருப்பதாக மனித வள அமைச்சர் வி. சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை பிரிக்பில்ட்ஸ் மெனாரா பேங் ரக்யாட் கட்டடத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டையொட்டிய அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் நடத்திய சந்திப்பு மற்றும் தே​நீர் விருந்து உபசரிப்பு நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் சிவகுமார் இதனை தெரிவித்தார்.

தமது தனிப்பட்ட அலுவல்களைக் கவனிக்கும் பெண் அந்தரங்க செயலாளர் மற்றும் சிறப்பு அதிகாரி கைது செய்யப்பட்டது தொடர்பில் விசாரணைக்காக அமைச்சர் சிவகுமாரை எஸ்.பி.ஆர்.எம். அழைத்து இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் அவரிடம் செய்தியாளர்கள் வினவினர்.

சித்திரைப்புத்தாண்டையொட்டி அரசு சாரா இயக்கங்களுடன் நல்லுறவை பேணும் வகையில் அமைச்சர் சிவகுமார் நடத்திய இந்த தேநீர் உபசரிப்பு நிகழ்வில் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ என். சிவகுமார், முன்னாள் போ​லீஸ் அதிகாரி டத்தோஸ்ரீ ஏ. தெய்வீகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்