Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசியத் தின கொண்டாட்டத்தை ரத்து செய்தது சபா
தற்போதைய செய்திகள்

மலேசியத் தின கொண்டாட்டத்தை ரத்து செய்தது சபா

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-

நாளை செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசிய தின கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக சபா மாநிலம் இன்று அறிவித்தது.

சபா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனத்த மழையினால் 7 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இயற்கை சீற்றத்தினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் வேளையில் அவர்களுக்கு முதல் உதவி வழங்கும் பொருட்டு, நாளைய மலேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வை மாநில அரசு ரத்து செய்வதாக சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் அறிவித்துள்ளார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது, சபா அரசாங்கத்தின் முன்னுரிமையாகும். வெள்ளப் பேரிடர் நிகழ்ந்த பகுதிகளில் மக்களுக்கான அனைத்து உதவிகளும் சென்றடைவதை உறுதிச் செய்வதற்கு நிர்வாகப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு சபா பிறந்த அந்த உன்னத தினக் கொண்டாட்ட நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக ஹஜிஜி நோர் தெரிவித்தார்.

கடந்த 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் மலாயாவுடன் இணைந்ததன் வாயிலாக மலேசியா உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து