Aug 25, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பட்டாணி அருகே ஆடவர் சடலம் – கொலை வழக்காக போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

சுங்கை பட்டாணி அருகே ஆடவர் சடலம் – கொலை வழக்காக போலீஸ் விசாரணை

Share:

சுங்கை பட்டாணி அருகே 30 வயதுடைய ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், குற்றச் செயல் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.55 மணியளவில் சடலம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபரின் மரணத்தில் குற்றவியல் கூறுகள் இருப்பது தெரியவந்துள்ளதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், காணாமல் போன உறவினர்களைக் கொண்ட குடும்பத்தினர் போலீசாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ், கொலை வழக்காக இச்சம்பவம் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று எ.சி.பி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

Related News