Mar 12, 2026
Thisaigal NewsYouTube
யூ.பி.எஸ்.ஆர் மீண்டும் கொண்டுவரப்படாது ! - ஃபத்லினா
தற்போதைய செய்திகள்

யூ.பி.எஸ்.ஆர் மீண்டும் கொண்டுவரப்படாது ! - ஃபத்லினா

Share:

தங்கள் பிள்ளைகளின் கல்வி மதிப்பீடு குறித்து பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கைகள் இருந்தாலும் தொடக்கப்பள்ளி 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வை கல்வி அமைச்சு மீண்டும் கொண்டு வராது என கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

சிறந்த எதிர்காலக் கல்வியை உறுதி செய்வதற்காக, புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதில், 2027ஆம் ஆண்டு பள்ளிப் பாடத்திட்ட அமலாக்க மறுஆய்வுதான் அமைச்சின் தற்போதைய கவனமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில் பெற்றோர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வழங்குவதன் மூலம் அமைச்சின் முயற்சிகளுக்கு உதவலாம் என்றார்.

தங்கள் பிள்ளைகளின் கல்வி மதிப்பீட்டிற்காக யூ.பி.எஸ்.ஆர் தேர்வு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என பெற்றோர்களில் ஒரு தரப்பினர் முன்வைத்த கோரிக்கை குறித்து அமைச்சரிடம் வினவியபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வை கல்வி அமைச்சு முழுமையாக நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு