May 28, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மாணவிகளுடன் பாலியல் தொடர்பு: விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரண்டு மாணவிகளுடன் பாலியல் தொடர்பு: விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு

Share:

கெமாமான், மார்ச்.27-

திரெங்கானு, கெமாமானில் இரண்டு மாணவிகளுடன் பாலியல் தொடர்பு கொண்டதுடன், தனது காம வேட்கையைத் தீர்த்துக் கொள்ள சில ஆபாசச் சாதனங்களைப் பயன்படுத்தியதாக தொழில் திறன் பயிற்சி மையம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவர் இன்று கெமாமான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

38 வயது அஹ்மாட் ஷாஹீர் ஷாரிபுஃடின் என்ற அந்த விரிவுரையாளருக்கு எதிராக மொத்தம் 8 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் கெமாசிக்கில் உள்ள மெஸ்ரா மால் கார் நிறுத்தும் இடம் மற்றும் கிஜாலில் உள்ள அவானா ஹோட்டலில் 19 வயது நிரம்பிய இரண்டு மாணவிகளுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த விரிவுரையாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்