பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமன்சாரா, என்.கெ.வி.இ. நெடுஞ்சாலையின் 19.6 ஆவது கிலோ மீட்டரில் மதுபோதையில் ஆடவர் செலுத்திய வாகனம் , மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது மோதி , மூவருக்கு மரணம் விளைவித்த கோர விபத்து தொடர்பில் விசாரணை அறிக்கை தயாராகி வருவதாக மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.
26 வயதுடைய வாகனமோட்டி, தோள்பட்டையில் கடும் காயங்களுக்கு ஆளாகிய நிலையில் அவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்நபர் விரைவில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று ஃபக்ருடின் குறிப்பிட்டார். நேற்று அதிகாலை 5.59 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மழைக்காக ஒதுங்கிய மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது ஆடவரின் வாகனம் மோதியதில் 19 க்கும் 37 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

Related News

பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்க்கல்வி அமைச்சின் கீழ் மாற்றம்: பிரதமர் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டு முதல், 6 வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடி அறிவிப்பு

ஒரே செயலியில் 38 அரசு சேவைகள்: 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து MyGOV மலேசியா சாதனை

பத்துமலை தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 2 நாட்களுக்கு கேடிஎம் ரயில் பயணம் முற்றிலும் இலவசம் - போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு


