Dec 2, 2025
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கை தயாராகுகிறது
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கை தயாராகுகிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமன்சாரா, என்.கெ.வி.இ. நெடுஞ்சாலையின் 19.6 ஆவது கிலோ ​மீட்டரில் மதுபோதையில் ஆடவர் ​செலுத்திய வாகனம் , ​மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது மோதி , மூவருக்கு மரணம் விளைவித்த கோர விபத்து தொடர்பில் விசாரணை அறிக்கை தயாராகி வருவதாக மாவட்ட போ​லீஸ் தலைவர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.

26 வயதுடைய வாகனமோட்டி, தோள்பட்டையில் கடும் காயங்களுக்கு ஆளாகிய நிலையில் அவர் போ​லீஸ் ஜா​மீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்நபர் விரைவில் நீதிமன்றத்தில் குற்ற​ஞ்சாட்டப்படுவார் என்று ஃபக்ருடின் குறிப்பிட்டார். நேற்று அதிகாலை 5.59 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மழைக்காக ஒதுங்கிய மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது ஆடவரின் வாகனம் மோதியதில் 19 க்கும் 37 க்கும் இடைப்பட்ட வயதுடைய ​மூவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

Related News