பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமன்சாரா, என்.கெ.வி.இ. நெடுஞ்சாலையின் 19.6 ஆவது கிலோ மீட்டரில் மதுபோதையில் ஆடவர் செலுத்திய வாகனம் , மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது மோதி , மூவருக்கு மரணம் விளைவித்த கோர விபத்து தொடர்பில் விசாரணை அறிக்கை தயாராகி வருவதாக மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.
26 வயதுடைய வாகனமோட்டி, தோள்பட்டையில் கடும் காயங்களுக்கு ஆளாகிய நிலையில் அவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்நபர் விரைவில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று ஃபக்ருடின் குறிப்பிட்டார். நேற்று அதிகாலை 5.59 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மழைக்காக ஒதுங்கிய மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது ஆடவரின் வாகனம் மோதியதில் 19 க்கும் 37 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


