Mar 12, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை முடிவடைய ஒரு வாரம் ஆகலாம்.
தற்போதைய செய்திகள்

விசாரணை முடிவடைய ஒரு வாரம் ஆகலாம்.

Share:

எல்மினா விமான விபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விமானக் கருப்புப் பெட்டியில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றால் இந்த விபத்து தொடர்பான விசாரணை ஒரு வாரத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வான் போக்குவரத்துத் துறையின் நிபுணத்துவம் பெற்றவரும் அத்துறையின் முன்னாள் வாரியத் தலைவருமான டத்தோ ஶ்ரீ அசாருதீன் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எனினும் கருப்புப் பெட்டியில் சேதம் ஏதும் ஏற்பட்டியிருக்குமானால் , விமானத்தில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதை துல்லியமாக கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படலாம் என்று அசாருதீன் விளக்கினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரேன் வான் போக்குவரத்துப் பாதையில் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் க்கு செந்தமான எம்.ஹ்17 விமானப் பேரிடர் சம்பவத்தில் அந்த விமானத்தின் கருப்புப் பெட்டியை சோதனை செய்வதில் முக்கிய பங்காற்றியவருமான அசாருதீன் , 33 ஆயிரம் அடியிலிருந்து விமானம் கீழே விழுந்திருந்தாலும் அந்த கருப்புப் பெட்டி சேதமுறவில்லை எனவே அப்பெட்டியில் உள்ள உரையாடலும் தெளிவாக கேட்க முடிந்ததாக நினைவு கூர்ந்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு