Mar 18, 2026
Thisaigal NewsYouTube
முகைதீன் மருமகனுக்கு கடைசி வாய்ப்பை வழங்கியது SPRM
தற்போதைய செய்திகள்

முகைதீன் மருமகனுக்கு கடைசி வாய்ப்பை வழங்கியது SPRM

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 29 -

லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் இருக்கும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் டத்துக் ஶ்ரீ முகமட் அட்லான் பெர்ஹான் னுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இன்று அறிவித்துள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் மின் விசாரணைக்கு ஆஜராக தவறுவாரேயானால் அவர் ஆஜராகாமலேயே அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இந்நிலையில் முகைதீன் மருமருகனை ஸ்.பி.ர்.ம் தொடர்ந்து தேடி வருகிறது. அவர், தாயகம் திரும்பி, தனக்கு எதிராக நடைபெறவிருக்கும் வழக்கில் தன்னை தற்காத்துக்கொள்ள முனைய வேண்டும். இதுவே ஸ்.பி.ர்.ம் அவருக்கு வழங்கும் கடைசி வாய்ப்பாகும் என்று அஸாம் பாக்கி இன்று விளக்கினார்.

முகைதீனின் மருமகனை கைது செய்வதற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டது. அவரின் வருகையின்றி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு ஸ்.பி.ர்.ம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், அவர் தொடர்ந்து நாடு திரும்ப மறுப்பாரோயானால் அவர் ஆஜராகாமலேயே அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வருவது ஸ்.பி.ர்.ம் மின் கடைசி தேர்வாக இருக்கும் என்று அஸாம் பாக்கி விவரித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு