May 24, 2026
Thisaigal NewsYouTube
அந்த வங்காளதேச ஆடவர் குறித்து எந்தவொரு ஆருடமும் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

அந்த வங்காளதேச ஆடவர் குறித்து எந்தவொரு ஆருடமும் வேண்டாம்

Share:

பாலிக் புலாவ் , செப்டம்பர் 03-

அரச மலேசிய போலீஸ் படையின் சின்னத்தை தாங்கிய டி சட்டை ஒன்றை அணிந்துக்கொண்டு, வங்காளதேச ஆடவர் ஒருவர் பினாங்கில் சுற்றித் திரிந்ததாக சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் ஆருடம் கூற வேண்டாம் என்று பரத் தயா மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் கமருல் ரிசல் ஜெனல் கேட்டுக்கொண்டார்.

போலீஸ் படை சின்னம் மற்றும் பரத் தயா மாவட்ட போலீஸ் தலைமையகம் என அச்சிடப்பட்டுள்ள அந்த டி சட்டை, அதிகாரத்துவப்பணிக்கு உரிய டி சட்டை அல்ல. மாறாக, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பரத் தயா மாவட்ட போலீசார் ஏற்பாடு செய்திருந்த 2016 ஆம் ஆண்டுக்கான உடற்பயிற்சி மற்றும் கோதொங்- ரோயாங் போன்ற சமூக கூட்டுப்பணிக்காக அச்சிடப்பட்ட பிரத்தியேக டி சட்டையாகும்.

19 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியை நபர் ஒருவர் பதிவேற்றம் செய்துள்ளார். அதனை போலீஸ் துறையும் கண்டறிந்துள்ளதாக கமருல் ரிசல் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது