கோலாலம்பூர், பிப்ரவரி.24-
மெக்சிகோவில் தற்போது நிலவி வரும் நிலையற்ற பாதுகாப்புச் சூழலை, மெக்சிகோ சிட்டியில் உள்ள மலேசியத் தூதரகம் வாயிலாக வெளியுறவு அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
மெக்சியோவில் வசிக்கும் அல்லது சுற்றுலா மேற்கொண்டுள்ள மலேசியர்கள் எப்போதும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளை முறையாகப் பின்பற்றுமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் அங்குள்ள மலேசியர்கள் யாரும் இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்படவில்லை என்பதைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








