ஆடவர் ஒருவர் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தினார் என்பதற்காக அவரை கண்டிப்பதாக கூறி, கண்மூடித்தனமாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபொங் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 21 வயது இளைஞரிடமிருந்து கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த மூன்று நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இந்த தாக்குதல் சம்பவம் ஜாலான் லாங்ஙாட் - கிள்ளான் சாலையின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தாக ஏசிபி சா ஹூங் ஃபொங் மேலும் கூறினார்.








