Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியருக்கு எதிராக மாணவன் பாலியல் தொல்லை வழக்கு
தற்போதைய செய்திகள்

ஆசிரியருக்கு எதிராக மாணவன் பாலியல் தொல்லை வழக்கு

Share:

ஜன.5
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிலாங்கூர் மாநிலத்தில் தங்கும் வசதியை கொண்ட பள்ளி ஒன்றில் தாம் படித்துக்கொண்டு இருந்த போது ஆசிரியர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக மாணவர் ஒருவர், ஷா ஆலம், உயர் ​நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

தமக்கு 13 வயதாக இருக்கும் போது மலாய்மொழி ஆசிரியரான அந்த நபர், தம்மை பல முறை படம் எடுத்ததுடன் வீட்டில் இருக்கும் போது, உடலில் சில பகுதிகளை படம் பிடித்து அனுப்பி வைக்குமாறு கூறி, தமக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக ஒரு ஹாக்கி பயிற்றுநரமான அந்த ஆசிரியருக்கு எதிராக தற்போது 17 வயதை எட்டியுள்ள அந்த மாணவர் தமது வழக்கு மனுவில் தெரிவித்துள்ளார்.

தமக்கு இன்னும் 18 வயதை நெருங்கவில்லை என்பதால் பதின்ம​ வயதுடைய அந்த மாணவர், தமது சகோதரர் மற்றும் தாயாரின் பெயரில் இந்த சிவில் வழக்கை 38 வயதுடைய ஆசிரியருக்கு எதிராக தொடுத்துள்ளார்.

Related News