Aug 9, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவருக்கு எதிராக விசாரணை அறிக்கை தயாராகிறது
தற்போதைய செய்திகள்

மருத்துவருக்கு எதிராக விசாரணை அறிக்கை தயாராகிறது

Share:

ஜார்ஜ்டவுன்,12-

சிகிச்சை பெற வந்த பெண் நோயாளிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, ஆபாச சேட்டைகளை புரிந்ததாகக் கூறப்படும் பினாங்கு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு எதிரான விசாரணை அறிக்கை தயாராகி வருவதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரசாக் முகமட் தெரிவித்துள்ளார்.

43 வயதுடைய அந்த அரசாங்க மருத்துவருக்கு எதிராக மூன்று விசாரணை அ றிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்தர பிப்ரவரி 20 ஆம் தேதி தனியார் கிளினிக்கில் சிசிக்சை பெற வந்த 20 வயது பெண்ணை ஆடை களையச் செய்து ஆபாச சேட்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

அந்த மருத்துவர், ஏற்கனவே மேலும் இரு பெண்களிடம் இத்தகைய சேட்டையைப் புரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அப்துல் ரசாக் குறிப்பிட்டார்.

போலீஸ் ஜாமீனில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ள அந்த மருத்துவர், குற்றவியல் சட்டம் 509 ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து