நெகிரி செம்பிலான் மாநில பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புத்திட்டம் உட்பட அவர்களின் நலன் சார்ந்த விவகாரங்களை அதீத அக்கறை செலுத்தியவரான முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சியு சே யோங், தமது லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2013 ஆம் பொதுத் தேர்தலில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக பகாவ் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு, மகத்தான வெற்றி பெற்ற சியு சே யோங், கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முதல் இரண்டு தவணைக் காலமாக சிரம்பான் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்து வருகிறார்கள்.
இன்று லோபாக் பசார் மாலாம் சந்தையில் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களை இலக்காக கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடபட்ட சியு சே யோங் அந்த இரவு சந்தையில் வணிகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் நேரடியாக கண்டறிந்தார்.

Related News

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

போலீஸ்காரர் உயிரிழந்த விபத்து: 80 வயது மூதாட்டி கைது

மலேசியாவின் AI, 5G மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை போடுகிறார் கோபிந்த் சிங் டியோ


