நெகிரி செம்பிலான் மாநில பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புத்திட்டம் உட்பட அவர்களின் நலன் சார்ந்த விவகாரங்களை அதீத அக்கறை செலுத்தியவரான முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சியு சே யோங், தமது லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2013 ஆம் பொதுத் தேர்தலில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக பகாவ் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு, மகத்தான வெற்றி பெற்ற சியு சே யோங், கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முதல் இரண்டு தவணைக் காலமாக சிரம்பான் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்து வருகிறார்கள்.
இன்று லோபாக் பசார் மாலாம் சந்தையில் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களை இலக்காக கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடபட்ட சியு சே யோங் அந்த இரவு சந்தையில் வணிகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் நேரடியாக கண்டறிந்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


