Dec 5, 2025
Thisaigal NewsYouTube
விமானம் அதிகாலை ஒரு மணிக்கு புறப்படவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

விமானம் அதிகாலை ஒரு மணிக்கு புறப்படவிருக்கிறது

Share:

இன்று காலை 6.09 மணிக்கு 180 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட IndiGo விமானம் , நடுவானில் ஏற்பட்ட இயந்திர கோறாற்றினால் தாய்லாந்து புகேட் தீவில் அவசரமாக தரையிறங்கியது.

பயணிகள் அனைவருக்கும் விசா வழங்கப்பட்டு, அந்த உல்லாச தீவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தின் இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் அந்த ஏர்பஸ் விமானம் இன்று பின்னிரவு புக்கெட் தீவிலிருந்து சென்னைக்கு புறப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட IndiGo விமானம், காலை 7.05 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் சென்றவதற்கு அட்டவணையிடப்பட்ட நிலையில் விமானம் குறித்த நேரத்தில் வந்தடையாததால் பயணிகளின் உறவினர்கள் பதற்றத்திற்கு ஆளாகினர்.

எனினும் புக்கேட் தீவிலிருந்து புறப்படவிருக்கும் IGO 1032 என்ற பதிவு எண்ணைக் கொண்ட IndiGo விமானம், நாளை சனிக்கிழமை அதிகாலையில் சென்னை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்