அண்மையில் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட அதிகாரத்துவ நிகழ்ச்சியின் போது மாணவர் ஒருவரிடம் ஆசிரியர் கடுமையாக நடந்து கொண்ட காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அ மைச்சு அறிவித்துள்ளது.
இதன் தொடர்பில் ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்துள்ள பணித்தன்மைக்கு ஏற்ப நன்நெறி கோட்பாட்டை பாதுகாப்பதிலும், அதன் கூறுகளை உறுதியாக கடைப்பிடிப்பிடிப்பதிலும் உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. .
ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனை தலையிலேயே அடிக்கும் காட்சியை கொண்ட 41 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று, ஆசிரியர்களுக்கான நல்லுரையுடன் மாது ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்து இருப்பது தொடர்பில் கல்வி அமைச்சு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.








