Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

லஞ்சம் பெற்றதாக இரு போலீஸ்காரர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

ஜோகூர் பாரு, ஜன.28-

லஞ்சம் பெற்றதாக இரண்டு போலீஸ் அதிகாரிகள், ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

உதவி சுப்ரிதெண்டன் அந்தஸ்தை கொண்ட 41 வயது முகமட் கைருல் சபேரி ஞான் என்ற அந்த போலீஸ் அதிகாரி, கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆடவர் ஒருவரிடம் 75 ஆயிரம் ரிங்கிட்டை கையூட்டாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

அந்த அதிகாரி , ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் வர்த்தக குற்றப்பிரிவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிபதி டத்தோ அஹமட் கமால் அரிபின் இஸ்மாயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

சார்ஜன் அந்தஸ்தைக்கெண்ட மற்றொரு போலீஸ் அதிகாரி, லஞ்சம் பெற்றதாக இதே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

50 வயது மைக்கல் அனாக் உமாப் என்ற அந்த போலீஸ் அதிகாரி கடந்த ஆண்டு குளுவாங்கில் உள்ள ஒரு வங்கியில் பெண் ஒருவரின் வங்கி கணக்கு வாயிலாக 5 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை