Mar 25, 2026
Thisaigal NewsYouTube
சாக்கடை குழிக்குள் சிக்கிய இருவர மரணம்
தற்போதைய செய்திகள்

சாக்கடை குழிக்குள் சிக்கிய இருவர மரணம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30-

சுமார் 4.5 மீட்டர் ஆழமுள்ள சாக்கடைக்குழியில் விஷ வாயு தாக்கி இரு ஆடவர்கள் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று காலை 9.20 மணியளவில் கெடா, ஜித்ரா அருகில் பாயா கெமுண்டிங் தேசிய இடைநிலைப்பள்ளியின் முன்புறம் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்து ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு,மீட்புப்படை வீரர்கள், அந்த சாக்கடைக்குழியை ஆராய்ந்த போது அதில் விஷ வாயு சுழற்சி இருப்பதை கண்டு பிடித்தனர்.

பின்னர் வாயு கலன்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களைப் பொருத்திக்கொண்டு, அந்த சாக்கடைக்குள் இறங்கி சோதனை செய்த போது, இரு ஆடவர்கள் சுயநினைவின்றி கிடப்பதை கண்டு பிடித்தனர்.

27 மற்றும் 31 வயதுடைய அவ்விருவரின் உடல்களையும் மீட்கும் நடவடிக்கை மதியம் 12.32 வரை நிறைவு பெற்றது. அவர்கள் மரணம் அடைந்து விட்டதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது