Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சாக்கடை குழிக்குள் சிக்கிய இருவர மரணம்
தற்போதைய செய்திகள்

சாக்கடை குழிக்குள் சிக்கிய இருவர மரணம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30-

சுமார் 4.5 மீட்டர் ஆழமுள்ள சாக்கடைக்குழியில் விஷ வாயு தாக்கி இரு ஆடவர்கள் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று காலை 9.20 மணியளவில் கெடா, ஜித்ரா அருகில் பாயா கெமுண்டிங் தேசிய இடைநிலைப்பள்ளியின் முன்புறம் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்து ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு,மீட்புப்படை வீரர்கள், அந்த சாக்கடைக்குழியை ஆராய்ந்த போது அதில் விஷ வாயு சுழற்சி இருப்பதை கண்டு பிடித்தனர்.

பின்னர் வாயு கலன்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களைப் பொருத்திக்கொண்டு, அந்த சாக்கடைக்குள் இறங்கி சோதனை செய்த போது, இரு ஆடவர்கள் சுயநினைவின்றி கிடப்பதை கண்டு பிடித்தனர்.

27 மற்றும் 31 வயதுடைய அவ்விருவரின் உடல்களையும் மீட்கும் நடவடிக்கை மதியம் 12.32 வரை நிறைவு பெற்றது. அவர்கள் மரணம் அடைந்து விட்டதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை